Skip to content

நெஞ்சுக்கு நீதி – ஐந்தாம் பாகம்

₹950₹902
5% OFF

கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி - ஐந்தாம் பாகம் - திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவங்கள், அரசியல் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்.

Category Autobiography
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119304790

Description

எனது பொது வாழ்க்கையில் என்மீது கற்கள் வீசப்படும் போதும்.மலர்கள் தூவப்படும் போதும், இரண்டையும் ஒன்றாகக் கருதித்தான் என் பயணத்தைத் தொடர்கிறேன்.

1996ஆம் ஆண்டு முதல் என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் நான் தலைவனாகப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடைபெற்ற சம்பவங்களும் இணைந்து வெளிவரவிருப்பது தான் நெஞ்சுக்கு நீதி" தொடரின் ஐந்தாம் பாகம் ஆகும்.

எனது வாழ்க்கை வரலாற்று நூல் என்று இது அழைக்கப்பட்டாலும், என் வாழ்க்கை வேறு, தி.மு.கழகத்தின் வாழ்க்கை வேறு என்ற வித்தியாசம் இல்லாமல் இரண்டுமே இரண்டறக் கலந்த ஒன்று என்பதால், இந்த இரண்டையும் கலந்துதான் இந்த நான்கு பாகங்களும் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன.

1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் தமிழகத்திலே தி.மு.கழக ஆட்சி அமைந்தது குறித்தும், பதவியேற்ற பின் நான் டெல்லி சென்று, மத்தியிலே ஆட்சி அமைக்கும் பணியிலே ஈடுபட்டது குறித்தும் எழுதி முடித்திருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக தற்போது "நெஞ்சுக்கு நீதி யின் ஐந்தாம் பாலம் தொடங்குகின்றது.

-புத்தகத்திலிருந்து