Skip to content

தமிழே மூச்சு! இன முழக்கம்!

₹80₹76
5% OFF

க. அன்பழகன் எழுதிய தமிழே மூச்சு! இன முழக்கம்! - தமிழ் மொழி, இன உணர்வு, மற்றும் தமிழர் எழுச்சி குறித்த ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய நூல்.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery
SKU 9788119304936

Description

உணர்ச்சியற்றவனுக்கு ஏது வாழ்வு? உணர்ச்சியற்றவனை மனிதன் என்று எவன் மதிப்பான்? உணர்ச்சியற்றவனை அவன் மனைவி கூட மதிக்க மாட்டாள்! எனவே உணர்ச்சி என்று சொன்னால் அந்த உணர்ச்சி ஆண்-பெண் வாழ்க்கையிலே வருகிற உணர்ச்சி மட்டும்தானா? கணவன்-மனைவி உறவிலே வளர்கிற உணர்ச்சி மட்டும்தானா? பிள்ளைப்பாசம் மட்டும்தானா? தன் குடும்பத்தோடு நின்றுவிடலாமா அந்த உணர்ச்சி? தன்னுடைய தாய்மொழி தமிழைப் போற்றுகிற உணர்வு தமிழனுக்கெல்லாம் ஏற்பட வேண்டாமா? தமிழைப் போற்ற வேண்டும் என்று கருதுவானேயானால், அந்தத் தமிழுக்குக் கேடு செய்கிறவனை எதிர்க்கிற திண்மை நம்மிடத்திலே உருவாக வேண்டாமா?

தமிழுக்குக் கேடு செய்கிறவன்- தமிழ் என்கிற உணர்வை அழிக்க விரும்புகிறவன்--தமிழ் என்கிற இயற்கையான உணர்வோடு ஒட்டி வருகிற எழுச்சிக்குக் கேடு செய்கிறவன் யாராக இருந்தாலும் -நினைத்துச் செய்தாலும் சரி; நினைக்காமல் செய்தாலும் சரி; அறிந்து செய்தாலும் சரி; அறியாமலே செய்தாலும் சரி; அதை எதிர்க்கிற ஓர் ஆற்றல் நம்முடைய மக்களுக்கெல்லாம் ஏற்படவேண்டும்.

-புத்தகத்திலிருந்து