Skip to content

அலரி மர நிழலில்

₹625.00

ஃபிராத் சுனேலின் 'அலரி மர நிழலில்' நாவல், இரண்டாம் உலகப் போரின் துயரங்களை துருக்கிய நிலத்தில் சித்தரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் துயரங்கள் கிழக்கு-மேற்கு நாடுகளில் நடந்தேறின. ஆனால் யூரேஷியா நிலத்தில் அதன் தாக்கம் மிகப்பெரியதாவும் இருந்தது. பொதுவாக நாம் நன்கு அறியாத துருக்கிய, மத்திய ஆசிய, காகசஸ் நாடுகளில்கூட போரின் நிழல் நீண்டிருந்தது. இரஷ்யாவின் எல்லையோரத்தில் இரஷ்யர்களாகவே வாழ்ந்து வந்த துருக்கியர்கள் அந்நியர்கள் எனக் கருதப்பட்டு குடும்பம் குடும்பமாய், கிராமம் கிராமமாய் வெளியேற்றப்பட்ட நிகழ்வு நாம் அறியாத ஒன்று. அவர்கள் உருவாக்கிய இருப்புப் பாதையில், அவர்களே முதன் முதலாய் துன்பத்தை நோக்கிப் பயணித்த நிகழ்வாக விரியும் இந்த நாவல், தமிழ் வாசகர்களுக்கு புதியதாகத்தான் இருக்கும். அல்லது, தமிழினத்துக்குப் புதிதாக இல்லாமலும் இருக்கலாம்.கடும் பனியில் உணவு, குடிநீர் எதுவுமின்றி, இயற்கை உபாதைகள் கழிக்கக்கூட வழியின்றி வாரக்கணக்கில் தொடர்ந்த அந்த இரயில் பயணத்தில், தொற்று நோய்களையும் தாண்டிப் பிழைத்துக் கிடந்தவர்கள் வெகு சொற்பம். அவர்கள் தொலைதூரத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் தொலைந்த வாழ்க்கையைத் தேடிய ஓர் அவலம் யூதர்களுக்கும் இவர்களும் வித்தியாசப்பட்டு நிற்பது இந்த ஒரு புள்ளியில்தான். அவர்களில் பலருக்கு போர் மரணத்தை நேரடிப் பரிசாக அளித்தது. இவர்கள் மறைமுகமாக அதைத் தழுவினர்.இராஜதந்திரியும் இந்தியாவுக்கான துருக்கிய தூதருமான நாவலாசிரியர் ஃபிராத் சுனேலின் (Firat Sunel) எழுத்துக்கள் மனித உணர்ச்சிகளைப் படம் போட்டுக் காட்டக்கூடியவை. ஆழியின் வாசகர்களுக்கு இவரது இஸ்மிர்லி முன்பே அறிமுகமாகியிருக்கும். இஸ்மிர்லி, கலங்கரை விளக்கக் குடும்பம் என இவரது மற்ற இரண்டு நாவல்களும் துருக்கி நிலத்தில் எழுதப்பட்டிருக்கும். (In the Shade of the Weeping Willows) அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ரஷ்ய நிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. துயரத்தை துருக்கிய நிலத்திலிருந்து அதன் கனம்குறையாமல் மொழிபெயர்த்திருக்கிறார் பிரியா.