Skip to content

ரங்கோன் ராதா

₹250.00

அறிஞர் அண்ணா எழுதிய 'ரங்கோன் ராதா' நாவல், காதல் மற்றும் வாழ்க்கையின் அழகை விவரிக்கிறது. இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

முழு நிலவு காண எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது. அதன் அழகிலே சொக்காதவர்கள் கிடையாது. கவி பாடுகிறான் களிப்புடன் பாமரருக்கும் ஏதோ ஓர் வகையான களிப்பு. நிலாக்காலம் - முழுநிலவு நாள் இவைகளையே பல கதைகளிலே அழகாகத் தீட்டுகிறார்கள். அது போலத்தானம்மா, பெண்களின் வாழ்விலும் முழுத் திருப்தியும் மகிழ்ச்சியும் நிரம்பி, ஒளி வீசினால், அதனால் பெண்களுக்கு மட்டுமல்ல. ஆடவர் உலகுக்கும் நன்மைதான் ஏற்படும்.தேய்பிறையின்போது தெருவும் வீடும் சாலையும் இருண்டு விடுகின்றன. மக்கள் பாழாய்ப்போன இருட்டுக்குப் பயந்து வீட்டோடு இருப்பார்கள். அருவருப்பு, பயம் இவைகளால் பீடிக்கப்படுகிறார்கள். முன் இருட்டு, பின் இருட்டு, முழு இருட்டு. மை இருட்டு என்று விதவிதமாகப் பிரித்துக் காட்டி வருத்தப்படுவார்கள். வெளியிலே உல்லாசமாக உலவவோ ஒளி இல்லை வீட்டுக்குள்ளே இருந்தாலோ நிம்மதி இல்லை; இருட்டுக் காலமே கள்ளருக்கு வேலை மிகுதியான நாள். ஆகவே, வீட்டிலே உறக்கமுற்றுக் கிடப்பர். இவ்வளவும் நிலவு இல்லாததால் வரும் கேடு. அதுபோலவே, பெண்ணின் வாழ்வு இருண்டு கிடந்தால், கஷ்டம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆடவருக்குத் தான்".-புத்தகத்திலிருந்து