Skip to content

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

₹80.00

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: பெண்ணியம் மற்றும் சமூக விமர்சன கவிதைகளின் தொகுப்பு. ஆழி பதிப்பகத்தின் வெளியீடு.

Category Poetry
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback

Description

"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே. ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு.'ராமனெங்கே! ராமன் அருளெங்கே! சஞ்சீவி மாமலையைத் தூக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில் கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப் பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்ப தரிதாகி அடிமையாய் வாழோமே? ஆண்மைதான் இன்றி மிடிமையில் ஆழ்ந்து விழியோமே?" என்றந்த வஞ்சி யுரைத்தாள்.பின் மற்றோர் பெருஞ்சத்தம், அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே! "அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே உம்எதிரில் வைக்கின்றேன் ஊஹுஹு உஹுஹு!"-புத்தகத்திலிருந்து