டால்ஸ்டாயின் மூன்று கண்கள்
டால்ஸ்டாயின் தத்துவங்களை ஆராயும் 'மூன்று கண்கள்' புத்தகம், மனித வாழ்வின் அர்த்தத்தை விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | அகநாழிகை பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Human Life , Philosophy , Self-Help |
Description
• டால்ஸ்டாய் மனித வாழ்வை மூன்று நியதிகளில் பொருத்துகிறார். ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது உலகியல் சார்ந்தது. இவ்விரண்டு நியதிகளும் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இவையல்லாது பொதுநியதிகளுக்கு உட்படாத சிறப்பு வாய்ப்பு மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பௌதிக விதிகளுக்கு அப்பாற்பட்ட அதனை விழிப்புணர்வு என்கிறோம்.• மகிழ்ச்சியாக வாழும் எல்லாக் குடும்பங்களும் பார்ப்பதற்கு அனேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் துயரத்தில் தத்தளிக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன.• நமக்குத் தெரிந்ததெல்லாம் என்னவென்றால் நமக்கு எதுவுமே தெரியாது என்பதுதான். அதுதான் மனிதருடைய அறிவின் உச்ச ஸ்தானமாகும்.
