மரணத்தை வென்றவர்
ஜி.என். சாய்பாபா அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டங்களை இந்நூல் விவரிக்கிறது. சமூக நீதிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Biography |
|---|---|
| Publisher | அலைகள் வெளியீட்டகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Biography , Political Prisoners , Social Activism |
Description
இந்திய மக்கள் நடத்துகிற போராட்டங்கள் எனும் வானத்தில் ஓர் செந்தாரகையாக பேராசிரியர். ஜி.என். சாய்பாபா மிளிர்கிறார். இந்திய அரசு கட்டவிழ்த்து விடுகிற மிருக வெறி கொண்ட வன்முறையை எதிர்க்கிற மனித உரிமைகளுக்கான செயல்வீரராகவும் புரட்சியாளராகவும் மட்டுமின்றி மைய இந்தியாவின் காடுகளில் நிலம், நீர், காட்டின் மீதான பழங்குடி மக்களுடைய உரிமை கோரி நடத்துகிற போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திரள் இயக்கங்களின் பற்றுறுதி கொண்ட ஆர்வலராகவும் எப்போதும் நினைவு கூறப்படுகிறார்.ஒடுக்கப்படுபவர்களுக்காக, சமூக நீதிக்காக, ஜனநாயக உரிமைகளுக்காக, புரட்சிக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது திடுக்கிடும் மரணம் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.அவரது குடும்பத்தினர். மாணவர்கள், சக ஊழியர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கிற பல்வேறு சமூக செயல் வீரர்களும் அவரை மிகவும் பரிவுடன் நினைவு கூறுகின்றனர். கல்வியாளர்கள். அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், உலகெங்கிலும் வாழ்கிற பல்லாயிரம் மக்கள் சாய் பாபா அவர்கள் சிறைக்கு வெளியில் வாழ்ந்த நாளிலும் சிறைக்குள்ளேயும் உறுதிப்பாடுமிக்க செயல்வீரராக அவர் இருந்ததைப் போற்றி மதிப்பளிக்கின்றனர்.தனது 90 விழுக்காட்டு ஊனமிக்க உடல் வரம்பிடுகிற இயலாமையை கடப்பதிலும் பத்தாண்டு காலமாக நாக்பூர் மையச் சிறையில் கேடுகெட்ட முட்டை வடிவ (அண்டா செல்) சிறை கொட்டடியில் தாக்குப்பிடித்து நிலவவும் மக்களின் உரிமை களுக்காக உறுதிப்பாட்டுடன் போராடுகிற அவர் உள்ளமும் அதனுடன் கூடிய அவரது மனத்திட்பமும்தான் காரணமாக இருந்தது. சாய்பாபா அவர்களது இத்தகைய போர்க்குணமும் உளத்திட்பமும் பற்றிய இதழியலாளர்கள், சக பயணிகள், தோழர்கள். நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைப்பற்றி நினைவுபடுத்திக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது. அத்தகைய நினைவுகூரல்கள், வாழ்க்கைக் குறிப்புகள், அஞ்சலிகள் அனைத்தும் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படுகிறது.
