தீம்பிழி
₹130.00
செவகாளி: தென்தமிழக மேய்ச்சல் இன மக்களின் வாழ்வை சித்தரிக்கும் வெற்றிச்செல்வன் இராஜேந்திரனின் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | அலர் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
தென்தமிழகத்தின் வறண்ட நிலப் பகுதிகளிலிருந்து தங்கள் ஆடுகளோடு அலைகுடிகளாகச் சென்று காவேரி ஆற்றின் பாசனப் பகுதிகளில் கிடை அமர்த்தி வாழும் மேய்ச்சல் இன மக்களின் வாழ்வைச் சொல்லும் கதைகளின் தொகுப்பு இந்தச் செவகாளி. கிடையிலிருந்து எழும் ஆட்டுப் புழுக்கையின் மணமும் ஆட்டுக் குட்டிகளின் சத்தமுமாய்க் கீதாரிகளுடன் வாழும் கலை அனுபவத்திற்குள் இத்தொகுப்பு இட்டுச் செல்கிறது. சமூக நெருக்கடியில் தொலைந்து போன மூளி ஆட்டின் நினைவு தாளாமல் அதைத் தேடி அலையும் கீதாரியின் மனநிலையுடன் எழுதப்பட்ட வெற்றிச்செல்வனின் இக்கதைகள் அருகிவரும் வலசைப் பாதையில் புனைவின் தடங்களைப் பதிக்க முயற்சி செய்கின்றன.-வினோத்