Skip to content

கி. ராஜநாராயணன்: தேர்ந்தெடுத்த கதைகள்

₹180₹171
5% OFF

கி. ராஜநாராயணன் எழுதிய கி. ராஜநாராயணன்: தேர்ந்தெடுத்த கதைகள் - கரிசல் மக்களின் வாழ்வையும், மண்ணின் வாசனையையும் உணர்த்தும் சிறுகதைத் தொகுப்பு. கரிசல் இலக்கியம் விரும்புவோருக்கு ஏற்றது.

Category Short Story
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 192
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எனது ஊரையும், எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப் போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலைகளில் வாரி இரைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்து ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடி வாங்கி இருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண்.

என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.

– கி.ராஜநாராயணன்