Skip to content

பௌத்த மறுமலர்ச்சி முன்னோடி ஏ.பி.பெரியசாமி புலவர் சிந்தனைகள்

₹500.00

ஏ.பி.பெரியசாமி புலவரின் சிந்தனைகள் மற்றும் பௌத்த மறுமலர்ச்சி குறித்த ஒரு முக்கியமான ஆய்வு நூல்.

Category Essay
Publisher பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Buddhism , Philosophy , Social History , Tamil Literature

Description

பௌத்த மறுமலர்ச்சி முன்னோடி ஏ.பி. பெரியசாமி புலவர் சிந்தனைகள் தமிழக சமூக வரலாற்றில் ஓர் ஒளிக்கீற்றைப் பாய்ச்சும் முன்னோடி ஆய்வாக அமைந்துள்ளது. மநுதர்மம், வேதங்கள், பாரதம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களை நன்கு கற்று அதில் ஆரியர்கள் எவ்வாறு பொய்க் கதைகளைக் கட்டிவிட்டு இந்த மக்களை ஏய்த்துள்ளனர் என்பதைச் சான்றுகளோடு ஆய்ந்து கூறியுள்ளார். இந்தச் சிறந்த பகுத்தறிவுச் சார்ந்த கருத்துப் பெட்டகத்தைத் தொகுத்தளித்த பேராசிரியர் முனைவர் பெ. விஜயகுமார் தமிழ்ச் சமூகத்தின் பாராட்டுக்குரியவர் ஆவார். தமிழ் வாசகர்கள் இந்த நூலை வாங்கிப் பயனடைந்து சமூக வாழ்வில் ஏற்றத்தைப் பெற வேண்டுமென என் விழைவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-வாலாசா வல்லவன்ஏ.பி.பெரியசாமி புலவர் எழுத்துக்களை பல இடங்களிலிருந்து திரட்டி தொகுக்க வேண்டியிருந்தாலும் இப்போது கிடைக்கக்கூடிய தமிழன் இதழிலிருந்து (1907-1914), புலவர் எழுதி வெளியாகியிருக்க கூடியவற்றை மட்டும் முதன் முறையாகத் தொகுத்து கொணருகிறார் பேராசிரியர் விஜயகுமார். அந்த வகையில் இது முக்கியமான - முன்னோடியான முயற்சி. 2005 ஆம் ஆண்டு தி.பெ.கமலநாதன் போதி இதழுக்கு அளித்த நேர்காணலில் உங்கள் தகப்பனாரின் எழுத்துகளைத் தனியே தொகுத்துக் கொண்டு வரலாமே? என்கிற கேள்விக்கு, அவருடைய வாழ்க்கை வரலாறு போல எழுதலாம். தமிழன் இதழ்களில் அவர் எழுதியதைத் தொகுத்து வெளியிடலாம். ஆனால் அவற்றை (தன்னிடமிருந்த தரவுகளை) ரோஜா முத்தையா நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன்' என்று பதில் கூறியிருந்தார். ஆனால் அதனை இப்போது பேராசிரியர் விஜயகுமார் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.-ஸ்டாலின் ராஜாங்கம்