Skip to content

மனசாட்சியைக் கொல்லும் மாணவர் நல விடுதிகள்

₹15.00

தமிழக மாணவர் நல விடுதிகளின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம். அரசு விடுதிகளின் உண்மை நிலை குறித்து அறிய...

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags Education , Government Policy , Social Issues

Description

தமிழகத்தில் உள்ள அரசு நல விடுதிகளின் இன்றைய நிலைமை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட சேரிகளை போல் உள்ளது. விடுதி மாணவர்கள் நவீன உலகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதவர்களாய், ஆண்டாண்டு காலமாய் இருந்த கொத்தடிமைகள் போல் உழன்று கொண்டிருக்கிறார்கள். விடுதி எனும் வதை முகாம்களில், தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமல்ல, நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் தான். அரசு விடுதிகளை நாடி மாணவர்கள் வந்தனர். ஆனால் "கொடுமை கொடுமையென்று கோயிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடின” கதையாய் மாறி போய்விட்டது இன்றைய விடுதி மாணவர்களின் நிலைமை. சிறைக் கைதிகளுக்கு கூட நல்ல உணவு, காற்றோட்டமான நல்ல சூழல் உள்ளது. ஆனால், தமிழக அரசு விடுதிகளோ 90 சதவீதம் போதிய கழிப்பறைகளும், தண்ணீர் வசதியும் இல்லாத விடுதிகளாகவே உள்ளன.