மந்திரக்குடை
ஞா. கலையரசி எழுதிய மந்திரக்குடை - காட்டின் ரகசியங்கள், உயிர்களின் இயல்பு, குழந்தைகளுக்கான சுவாரசியமான மாயாஜாலக் கதை! இயற்கையை அறிந்துகொள்ள உதவும் சிறார் நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
Description
மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
ஞா.கலையரசி காரைக்காலில் பிறந்தவர். தற்போது புதுச்சேரியில் வசிக்கிறார். SBI வங்கியில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இதுவரை ஐந்து சிறுவர் கதை மின்னூல்களை வெளியிட்டுள்ளார். சிறுவர் வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ‘சுட்டி உலகம்’ (https://chuttiulagam.com) எனும் வலைதளத்தின் ஆசிரியர் குழுவிலும், ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் மாத மின்னிதழின் ஆசிரியர் குழுவிலும் இருக்கின்றார்.
