Skip to content

விதானத்துச் சித்திரம்

₹110.00

ஸ்ரீனிவாசன் எழுதிய 'விதானத்துச் சித்திரம்' கவிதைத் தொகுப்பு! நினைவுகளின் இனிமையை கவிதைகளில் தேடுங்கள்.

Category Poetry
Publisher போதி வனம்
Language Tamil
Year 2017
Format Paperback

Description

இந்தக் கவிதைகள் ஒருவிதத்தில் தன்மைப் பொருள் பேசுபவை. அந்தத் தன்மை நினைவுகளில் அமிர்தா வருகிறாள். நகுலனின் சுசீலாபோல், கலாப்ரியாவின் சசிபோல் ரவிசுப்பிரமணியனுக்கு ஒரு அரூப அமிர்தா. இந்த நினைவுகளை ‘ஞாபக நதி’, ‘நீ நிகழ்த்திய கோடைமழை’, ‘பகல் நேரத்துப் பொரிகளின் ஞாபகம்’, ‘இமைகளிலே கரையுடைக்கும் ஜலதாரை’, ‘நினைவின் கமகங்கள்’எனப் பல பல பெயர்களில் கவிதைக்குள் படைத்திருக்கிறார். கவிஞனின் இதுபோன்ற நினைவுகள் முயங்கிப் பெற்ற குழந்தைகள் இந்தத் தொகுப்பில் தனித்துவத்துடன் துள்ளித் திரிகின்றன. சங்கீதத்தின் ஏறுநிரல் இறங்குநிரல்போல், கவிதையின் தொடக்க வரிகள் ‘எள் விளக்கு’வெளிச்சத்தைப் போல் தொடங்கி, கணுக்கால் வெள்ளமாக நிறைவுறுகின்றன. சங்கீதத்தை முறைப்படி கற்ற ரவி, கவிதைக்குள் அதைக் கொண்டுவருவதை ஒரு ரசவாதம்போலவே செய்திருக்கிறார். இந்த ரசவாதத்தில் ‘விதானத்துச் சித்திரங்கள்’ தரை இறங்கி ஆடுகின்றன, வானில் பறக்கின்றன!ஸ்ரீனிவாசன் முகப்பு ஓவியங்களும் உள் ஓவியங்களும் வரைந்திருக்கிறார். தொகுப்புக்கு மேலும் அழகூட்டுகின்றன இந்த ஓவியங்கள்!