Skip to content

நீ நான் தாமிரபரணி

₹280.00

நீ நான் தாமிரபரணி நாவலில் மர்மம், காதல், நட்பு பின்னணியில் ஒரு துப்பறியும் கதை. என். கணேசன் எழுதிய சிறந்த தமிழ் நாவல்!

Category Novel
Publisher பிளாக் ஹோல் பதிப்பகம்
Language Tamil
Year 2015
Format Paperback

Description

காதல், பாசம், குடும்பம், நட்பு ஆகியஉன்னதங்களுடன் மர்மங்களும்பிரதானமாகப் பின்னி இழையோடும்கதைக்களம் …                                                             ஒரு நாவல் புகழின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் காலத்தில் திடீரென்று அந்த நாவலாசிரியர் மர்மமான முறையில் காணாமல் போய் விடுகிறார். அவர் பற்றி துப்பறிய முனைபவர்கள் அச்சுறுத்தப்பட்டு தடுக்கப்படுகிறார்கள். மீறிய ஒருவர் பொய் வழக்கில் சிறை சென்ற பிறகு பின் வாங்குகிறார். அவர் 25 வருடங்கள் கழிந்த பின், பெரிய பத்திரிகையாளராகி, அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பைத் தன்னிடம் பணி புரியும் திறமையான இளைஞனிடம் ஒப்படைக்கிறார். ரகசியம் அந்த நாவலிலேயே மறைந்து இருக்கிறதென்று கண்டுபிடிக்கும் அவனுக்கும் பலத்த எதிர்ப்பு மறைமுகமாகப் பல வழிகளில் வருகிறது. அதையும் மீறி, ரகசியத்தில் அவனும் ஒரு அங்கம் என்பதை அறியாமல், பல திருப்பங்களுடன் அவன் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் பாணியும் நிகழ்வுகளும் மிக விறுவிறுப்பும் சுவாரசியமுமானவை.