கேள்வியும் நானே… பதிலும் நானே…
வெ. இறையன்பு எழுதிய 'கேள்வியும் நானே...' புத்தகம், சுயமுன்னேற்றத்திற்கான கேள்விகளையும் பதில்களையும் உள்ளடக்கியது.
| Category | Essay |
|---|---|
| Publisher | தினத் தந்தி |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Self-Help , Tamil Literature |
Description
ஏன்? எதற்கு? எப்படி என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய கேள்விகளை எழுப்பி, அதற்கான விடையைக் கண்டுபிடிப்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல வார, மாத இதழ்களில் கேள்வி & பதில் பகுதி என்பது சிறப்பு மிக்க அங்கமாகவே பங்கு பெறுகிறது.வாசகர்களிடம் இருந்து கேள்வியைப் பெற்று பதில் அளிக்கும் முறைதான் பெரும்பாலும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சாளருமான வெ.இறையன்பு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அவரே கேள்வி கேட்டு அவரே பதில் அளித்தார். கேள்விகளால் ஒரு அறிவு வேள்வியை நடத்தினார்.இது ராணியில் வெளியானபோதே வாசகர்களின் வரவேற்பையும், பலமான பாராட்டுகளையும் பெற்றது. இந்த முயற்சியில் அவர் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.இந்த கேள்வி & பதில் பகுதி வாசகர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது. மாணவர்கள் மனதில் தெளிவையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. புதிய தகவல்களையும், விளக்கங்களையும் எடுத்துக்கூறி அறிவை மிளிரச் செய்கிறது.
