Skip to content

குரு வம்சம்

₹520.00

எம். சுப்ரமணியன் எழுதிய 'குரு வம்சம்' நாவல், பிராமண சமூகத்தில் காதல், மதம் மற்றும் சமூக சீர்திருத்தத்தை பேசுகிறது.

Category Novel
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

சுப்பையாஊன் உருக திருவெம்பாவை பாடினார். பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். மாணிக்கவாசகருக்கு நெகிழாதவர்கள் மரக்கட்டைகளாகத் தான் இருக்க முடியும். திருவெம்பாவையோடு சுப்பையா போனஸாக, ‘பாதம் காணக் காணப் பரவசம்’ என்று நந்தனார் கீர்த்தனை ஒன்றையும் பாடினார் பிராமணக்குடும்பங்களில் வேரைத் தோண்டிக்கொண்டு போனால் அல்லது கிளையைப் பிடித்துக்கொண்டே மேலேறினால், பல குடும்பங்களில் பரமபக்தர்களையும் அவர்களின் வாரிசுகளாக அவர்கள் அருகிலேயே புரட்சியாளர்களையும் பார்க்கமுடியும்.ஒருகிளையில் பூத்த இரு மலர்களாக ஜாதிபித்து, சமூக சீர்திருத்தம் என்றஇரண்டையும் ஒரே குடும்பத்தில், ஒரேநேரத்தில் பிராமண சமூகத்தில் பார்க்க முடியும். நம்பிக்கை சார்ந்து ஒரு சாராரும், சிந்தனைசார்ந்து ஒரு சாராரும் அங்கேஇயங்குவது சகஜம். மரபின் மீது பற்றும், நவீனத்தின்மீது ஈர்ப்பும் அங்கே இயல்பானது. காலாவதியாகிப் போனதைக் கைவிடாதவர்களும், எதிர்காலத்தை இன்றே அழைத்துவர விரும்புபவர்களும் ஒரு கூரைக்குள் வாழும்அதிசயம் அங்கே சர்வ சாதாரணம்.அந்தஅதிசயத்தைத்தான் இந்தக் கதை பேச முற்படுகிறது.அடிப்படையில் இது ஒரு காதல்கதை. ஆனால் காதல் கதை மட்டுமல்ல. கட்டைவிரல்நகத்தில் தீட்டிய கடந்த காலத்தின் சித்திரம்.மாலன்எழுத்தாளர்பத்திரிகையாளர்