நனவோடை
சௌரிராஜன் எழுதிய 'நனவோடை' கவிதைத் தொகுப்பு! பாரதி, கம்பன், வள்ளுவன் குறித்த ஆழமான கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
‘எத்தனைகோடிஇன்பம் வைத்தாய் இறைவா...’ மனனம் செய்தபோது தெரியாது பாரதியை. அத்தீயைத் தொட்டவுடன் உணர்ந்துகொண்டேன், மதியா உலகில் மதிப்புடன் இருந்த புரியா பேரிலக்கியம் என்று. கம்பன், வள்ளுவன், இளங்கோவை அறிமுகம் செய்தவன் பாரதியாமறிந்த மொழிகளிலே சொன்னவன் பாரதிமனதில் உறுதி வேண்டும் சொல்லித்தந்தவன் பாரதிகாணி நிலம் வேண்டும்வேண்டச் சொன்னவன் பாரதிநன்றிகள் கோடி உனக்கு. எவ்வளவுசொல்லவேண்டும், உன்னை எனக்குக் கொடுத்ததிரு மணி ஐயா அவர்களுக்கு? தேவாரம் அறிமுகம் செய்து, கை கூட்டி அழைத்துச்சென்றுபெருமையுடன் நின்ற நீங்கள் என் துரோணர்.முதல் பாடலிலேயே முட்டி நின்ற எனக்கு,கொக்கொக்ககூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்கசீர்த்த இடத்து. என, வள்ளுவனை அறிமுகம் செய்து, இயல்பாய் இருக்கச் செய்த நம் முதல் பயணம்தேனியிலிருந்து சின்னமனூருக்கு... அது பேருந்து பயணம்மட்டுமல்ல, உங்களின் தேடல் நான் எனத் தெரிந்துகொண்டதருணம். உங்களின் நீட்சியாகக் கண்டேன் கடைக்கோடியில் ஓர் தனுஷ்கோடி. இயல்பைமாற்றி கம்பனை என் காதுகளில் தேனாய்ஊற்றிய நாட்கள், நினைவிருக்கும் வரை...
