Skip to content

வனபடுகன்

₹160.00

வனபடுகன் நாவல், M. அபூபக்கர் சித்தீக் எழுதிய ஒரு சிறந்த தமிழ் இலக்கியம். இப்போதே வாங்குங்கள்!

Category Novel
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
Language Tamil
Year 2021
Format Paperback

Description

“எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின் ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம் புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம் புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான் இந்த உசுரோடுதான் இருக்கேனா. இந்த வனக்காட்டுக்காக உயிரையே கொடுப்பேன்னு சொன்னியேடா பெரியண்ணா, சொன்ன மாதிரியே கொடுத்துட்டியா. அறுத்தவன உயிரோட விட்டுட்டியேடா. பசுமையான வண்ணாத்திப்பாறை முழுக்க எழவுகூட்டி பறை மேளம் கேக்குதே. அடேய் மலையப்பா நீதான் துணையின்னு இருந்தோமே. ஊரே எழவுகூட்டி பறை சத்தம் கேக்க வைச்சுட்டியே. மணி சத்தம் கேட்டு சலிச்சு போச்சுன்னு எழவு சத்தம் கேட்க ஆசைப்பட்டியா".