Skip to content

அர்த்தமற்ற இந்து மதம் (பாகம் 1)

₹70.00

மஞ்சை வசந்தன் எழுதிய 'அர்த்தமற்ற இந்து மதம்' புத்தகம் இந்து மதத்தின் அபத்த வாதங்களை பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அலசுகிறது.

Category Essay
Publisher திராவிடர் கழகம்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Hinduism , Rationalism , Religion , Social Commentary

Description

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், அர்த்தமற்ற கருத்துக்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள கண்ணதாசனின் நூலுக்குச் சரியான சூட்டுக்கோலாக இந்நூல் வெளிவந்துள்ளது.பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அபத்த வாதங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுக்கிறார் இந்நூலாசிரியர் மஞ்சை வசந்தன்.பாமர மக்களுக்கும் புரியும் வகையில் நறுக்கென்று தைத்தாற்போல் உளறல் வாதங்களை உடைத்து நொறுக்கியிருப்பது இந்நூலின் சிறப்புக்குரிய அம்சமாகும்.கடவுள் இல்லையென்பதையும் விதி, பிறவிகள், பாவ புண்ணியம் என்பதெல்லாம் கிடையாது என்பதையும் ஆதாரங்களோடு தெளிவாய் விளக்கியுள்ளார்.பகவத் கீதையின் பித்தலாட்டங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சகுனங்கள் பார்க்கக்கூடாது என்பதையும், கனவுகள் பலிக்காது என்பதையும் சரியான ஆதாரங்களோடும், வாதங்களோடும் தெளிவுபடுத்தியுள்ளார்.இந்து மதத்தின் இழிநிலையையும், அமைப்பற்ற தன்மையையும் இடித்துரைத்துள்ளார். - இந்து மதமேயன்றிப் பிற மதங்களும் அர்த்தமற்றவையே என்பதை 'அர்த்தமற்ற பிற மதங்கள்' என்ற தலைப்பிலே அருமையாக விளக்கியுள்ளார்.-- கி. வீரமணி (அணிந்துரை)