கலவரம்
₹90.00
சுஜாதாவின் கோணல் பார்வை: சமூக விமர்சனக் கட்டுரை. தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான பார்வை!
| Category | Essay |
|---|---|
| Publisher | திராவிடன் ஸ்டாக் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Criticism , Culture , Social Commentary , Tamil Literature |
சுஜாதா விஞ்ஞானம் படித்தவர்தான். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு “வேத வித்து”. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவே தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்தான் சுஜாதா வகையினர். தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொள்ளவும், உழைக்காமல், உண்டு மகிழ்ந்து சுரண்டி வாழவும் தேவையான நெறி முறைகளை வேதங்களும் புராண இதிகாசங்களும் இவர்களுக்கு வாரி வாரி வழங்குகின்றன. எனவே, இவைகளை மேன்மைப் படுத்துவதும், தூக்கிப் பிடிப்பதும் இவர்களது தலையாய கடமையாகிப் போய்விட்டது.