பாரிஸ்
₹250.00
அரிசங்கரின் 'பாரிஸ்' நாவல் புதுச்சேரியின் மர்மங்கள் நிறைந்த கதையைச் சொல்கிறது. பிரெஞ்சு கலாச்சாரத்தின் பின்னணியில் ஒரு தமிழ் நாவல்!
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
புதுச்சேரி எனும் யூனியன் பிரதேசம் தன்னுள் பல்வேறு மனிதர்களை, நிலங்களை, வெவ்வேறு மொழி பேசும் மக்களைக் கொண்ட வித்தியாசமான ஒரு நிலமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. தன்னைச் சுற்றி வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் பிரிந்து இருந்தாலும், அதன் அடையாளம் தமிழோ, மலையாளமோ அல்லது தெலுங்கோ அல்லாமல், பிரெஞ்சாக இருக்கிறது. இன்னும் அது பிரெஞ்சு நிலமாகவே ஒரு பகுதியினரால் நம்பவும்படுகிறது. அருகில் இருக்கும் தமிழக மாவட்ட மக்களுக்குக் கூட தெரியாத பல விஷயங்கள் புதுச்சேரியில் புதைந்துள்ளன. அதில் சிறு துளியை மட்டுமே இக்கதை உரசிச்செல்கிறது.
