மாற்றுப் பாதையில் ஒரு பயணி
யவனிகா ஸ்ரீராமின் 'மாற்றுப் பாதையில் ஒரு பயணி' கவிதைத் தொகுப்பு! ஆழ்ந்த உணர்வுகளின் கவிதை அனுபவம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
Description
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்கபல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றனகருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன்முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தைஅது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும்கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்தால்ஒரு நீண்ட பகல் பொழுதை மகிழ்ச்சியுடன்அதற்கு ஒப்புக்கொடுப்பேன்ஒரு லாரி டிரைவரின் வெகுதூரங்களுக்கும்அணைகளில் வளர்ப்பு மீன்களுக்கு வலை வீசுபவரின்துள்ளும் புலர்காலைக்கும்பள்ளிக்குச்செல்லும் சிறார்கள் விடியும் வரைமூங்கில் கூடைகளில் பூப்பறிக்கதலைச் சும்மாட்டில் கட்டிய டார்ச் ஒளி மங்கும் பொழுதுஇரவு ஷிப்ட் முடிந்து நூற்பாலைப் பேருந்துகள்பெண்களை ஊருக்குள் இறக்கி விடும் தலைகலைந்த வேளையில்பால் வேகன்கள் ஹார்ன் ஒலிக்கபத்திரிக்கைக் கட்டுகளைப்பிரித்தனுப்பும் இடத்தில்இரையும் ஒரு தேனிர் பாய்லர் முன்பு பற்கள்நடுங்கக் கதகதப்புடன் குளிர்காலத்திற்கு முகமன் சொல்கிறேன்
