Skip to content

கானகன் (எழுத்து பிரசுரம்)

சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது (2016)

₹300₹285
5% OFF

லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் (எழுத்து பிரசுரம்) - விலங்குகளின் கூரிய அறிவையும், நீதிக்கான புலிகளின் வேட்டையையும் உணர்த்தும் சிறந்த நாவல் இது.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Zero Degree)
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.

– எஸ்.வி.ராஜதுரை