Skip to content

சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்

₹70.00

இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை ஆராயும் ஒரு வரலாற்றுப் பார்வை. ஜனகன் எழுதிய சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு மாமனிதர்கள்!

Category Essay
Publisher கங்கை புத்தக நிலையம்
Language Tamil
Format Paperback
Tags Biography , History , Religion

Description

பல நூற்றாண்டுகளாக எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்ந்துகொண்டிருந்த உலகமானது ஒரு காலத்தில் யூத நாட்டை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியது. பரி.லூக்கா எழுதிய நற்செய்தி நூலில் குறிப்பிடும் அக்காரியங்களை நாம் ஆராய்வோம். உலகை மாற்றியவரும் உங்கள் வாழ்விலும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் மாற்றத்தைக் கொடுப்பவருமாகிய மாமனிதர் இயேசுவின் சரித்திரத்தை எழுதிய லூக்கா என்பவர் யூதரல்ல. அவருடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவருமல்லர். இயேசு செய்த காரியங்களைக் கண்டவருமல்லர். ஆனால், அவர் செய்த அற்புதங்களை உலகிற்கு ஒழுங்குபடுத்தித் தர விரும்பினார். லூக்கா என்பவர் ஒரு சிறந்த மருத்துவர், அறிவியல் அறிஞர், வரலாறு எழுதும் ஆற்றல் மிக்கவர். இயேசுவின் வாழ்வில் நடந்தவற்றைக் கண்ணாரக் கண்டவர்களது சாட்சியங்களை வைத்து அவை யாவையும் ஒழுங்காய் எழுத எண்ணினார். உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதைப்பற்றி அவர் நன்கு அறிந்தவர். திருமுழுக்கு முனிவர் யோவான் என்பவரது வாழ்விலிருந்து தனது நூலை ஆரம்பிக்கிறார். ஒரு குறும்படத்தின் ஆரம்பத்தைப்போல அது உள்ளது