மொழிப் போராட்டம் (கௌரா)
இரா. குணசேகரன் எழுதிய 'மொழிப் போராட்டம்' நூலில் தமிழ் எழுச்சி மற்றும் மொழிப் போராட்ட வரலாறு.
| Category | Essay |
|---|---|
| Publisher | கௌரா பதிப்பகக் குழுமம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Cultural History , Language Politics , Tamil Literature |
Description
இரா.குணசேகரன் என்னும் பொருண்மொழி ஒரு பண்புத்தொகை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் உப்பளப்பாடி திரு.மு.இராமு, திருமதி. சரோசா ஆகியோர் தம் தலைமகன், கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்ற புதுமைப் பூங்குயில் "எட்பக்கம் வந்திடும் இந்தி,அது எத்துணைப் பட்டாளம் கூட்டி வரும்" என்ற பாவேந்தர் முழக்கத்தை நாப்பறையாகக் கொட்டிய தமிழுமான மறவர்.குணசேகரன் ஆராய்ச்சி உலகு புகுந்து, அரிய செய்திகளைத் திரட்டி இதுகாண் தமிழ் எழுச்சி என இந்நூலிற் படைத்து காட்டும் வரலாறு தமிழினத்துக்கு எழுச்சிப் பண் நரம்பில் முறுக்கேற்றும் நல்லுணர்வு நெஞ்சத்தில் தமிழறிவு கொழுந்து விடச் செய்யும் இயற்கை வரம் பேச்சாலும், எழுத்தாலும் பெருந்துண்டு ஒச்சிவரும் குணசேகரன் தமிழுலகில் வளரும் பயிர் சிந்தனை வானத்தில் சிறகடிக்கும் வானம்பாடி அருந்தமிழ் நூல் கற்று நமக்கு நல்விருந்து படைக்கும் தமிழ்க்கொண்டல். கொள்கையாளர் குணசேகரன் பணி வளர்க வாழ்க.-முனைவர் கு.வே.பாலசுப்ரமணியன்
