மானுடத்தின் மகரந்தங்கள்
ராஜம் கிருஷ்ணன் எழுதிய 'மானுடத்தின் மகரந்தங்கள்' நாவல், பாரதியாரின் வாழ்க்கை மற்றும் பெண்களின் சமூக நிலை குறித்து பேசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | Her Stories |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
Description
மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினைப் புதிய கோணத்தில் எழுதுவதற்காக திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் சேகரித்த தகவல்களிலிருந்து முகிழ்த்தது இந்த நாவல்.இந்த நாவலில் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் நிலையையும், அவர்களின் சிந்தனை ஓட்டங்களையும், அரசியல்-பொருளாதார சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் மிகச் சிறப்பாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பெண்கள் ஆண்களுக்கு அடிமையா அல்லது பெண்கள் பெண்களுக்கேதான் அடிமையா என்ற கேள்வியையும் இந்த நாவல் நம் மனத்தில் எழுப்புகிறது. ஒரு பெண் அறிவிலும், ஆற்றலிலும், ஏன் பொருளாதார நிலையிலும்கூட எவ்வளவு உயர்ந்திருந்தாலும், சமுதாயத்தில் அடிமையாகவே இருப்பதை இந்தியாவில்தான் காண முடியும்!
