பூப்பறிக்க வருகிறோம்
நெஞ்சில் நிறைந்த நினைவுகள்
பாரதி திலகர் எழுதிய 'பூப்பறிக்க வருகிறோம்' நூலில், கள்ளிகுளம் மக்களின் பண்பாட்டுச் சுவடுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | Her Stories |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Culture , Memoir , Social History , Tamil Culture |
Description
இளவயதில் பசுமரத்தாணி போல் பதிந்தவற்றைப் பதிவாக்கிவிடும் பரவச்சாறு Oஎழுத்துநடை இவருடையது. வானொலி, சைக்கிள், சினிமா டூரிங் டாக்கீஸ். பனைநுங்கு, கொண்டைமுடி கட்டுநர். உப்பு வணிகர், பல்லாங்குழி தாயம், தட்டாங்கல், பாண்டியாட்டம், புத்தக வாசிப்புச் சாலை, சீட்டிப் பாவாடையும் உடை வகைகளும், கம்மல் மூக்குத்தி கருத்தணிகள். வெத்திலைப் பெட்டி, முறம் என்ற சுளகு, கூஜா, பனைநார்ப் பெட்டி என்று ஒவ்வொன்றாக நினைவுகளில் நனைந்து விளக்கிவிடுகிறார்.கள்ளிகுளம் மக்களிடம் புழங்கும் மொழி, வட்டார வழக்கு, பண்பாட்டுச் செயல்கள் பல தலைமுறை கடந்தும் நிற்கும்: நாடுகள் பல கடந்தாலும் நிலைக்கும்.மொத்தத்தில் இளைய தலைமுறைகள் தெரிந்துகொள்ள வேண்டிய பண்பாட்டுப் பதிவுகளைப் பெரிய நூலாகத் தந்த பாரதி பாராட்டுக்குரியவர். பண்பாட்டுச் சுவடுகளைப் பாதுகாத்துப் பதிவு செய்த பல்துறை வித்தகர் பாரதி திலகர் பல்லாண்டு வாழ்க!- முனைவர் தாயம்மாள் அறவாணன்
