Skip to content

இமயத்து மகான்களுடன் என் வாழ்க்கை

₹599.00

சுவாமி ராமா எழுதிய 'இமயத்து மகான்களுடன் என் வாழ்க்கை' புத்தகத்தில் இமயமலை மகான்களின் அனுபவங்கள், ஆன்மீகப் பயணத்தைப் பற்றி அறியுங்கள்.

Category Autobiography
Publisher Jaico Publishing House
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Biography , Indian Philosophy , Spirituality

Description

இந்த ஆன்மீகத் தன்வரலாற்று நூலில், இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதுக்களில் ஒருவரான ஸ்ரீ சுவாமி ராமாவின் செய்தியைச் செவிமடுங்கள். தன்னுடைய நேசமிக்க குருவான ஸ்ரீ பெங்காலி பாபா, மற்றும் பல பிரபலமான, ஆனால் யாருக்கும் தென்படாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மகான்களுடனான தன்னுடைய அனுபவங்களை சுவாமி ராமா இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார். இந்த அனுபவங்களின் வாயிலாக, இமயத்து மகான்களின் வாழ்க்கைப் பாரம்பரியத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.சுவாமி ராமா மேற்கொண்ட ஞானோதயத்திற்கான தேடல் இந்த ஆன்மீகப் பொக்கிஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய ஆன்மீகக் குறிக்கோளின் மையமாகத் திகழ்கின்ற 'வாழும் ஞானம்' குறித்த ஆழமான உள்நோக்குகளையும் அது உங்களுக்குக் கொடுக்கிறது. 1996ல் சுவாமிஜி மகாசமாதி அடைந்து பல காலம் ஆன பிறகும்கூட, இந்த வாழும் ஞானம், இன்றளவும் ஞானோதயத்தைத் தேடிச் செல்கின்றவர்களுக்குத் தொடர்ந்து அறிவுத் தெளிவூட்டி வருகிறது, இமாலய ஆன்மீகப் பாரம்பரியத்தைச் சேர்ந்த மகான்களின் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து வருகிறது.20ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் மகான்களில் ஒருவரான சுவாமி ராமா, 'ஹிமாலயன் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார். இமயமலையில் பிறந்த அவர், இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் கல்வி கற்றார். இமயமலைக் குகைகளில் அமைந்த மடங்களிலும் திபெத்திலும் அவர் ஆன்மீகப் பயிற்சி பெற்றார். 'இமயத்து மகான்களுடன் என் வாழ்க்கை' என்ற அவருடைய பிரபலமான இப்புத்தகம் அவருடைய பல பரிமாணங்களை வெளிப்படுத்துவதோடு, இமாலய ஆன்மீகப் பாரம்பரியத்தின் மொத்த உருவமாக அவர் எவ்வாறு விளங்குகிறார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.