Skip to content

ரஜினியின் வாழ்க்கை மந்திரங்கள்

₹250.00

ரஜினிகாந்தின் வாழ்க்கை தத்துவங்களை அறிந்துகொள்ளுங்கள்! ரஜினியின் வாழ்க்கை மந்திரங்கள் புத்தகம் மூலம் உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.

Category Essay
Publisher Jaico Publishing House
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Biography , Inspirational , Self-Help

Description

"எனது விசிறிகளும் மற்றும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருமே இந்த நூலை வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமானதாகவும் வாழ்க்கையை உயர்த்தக்கூடிய அளவில் மிக்க பயனளிப்பதாகவும் கருதுவார்கள் என்று நான் நம்புகிறேன்." - ரஜினிகாந்த்,ரஜினிகாந்தின் மிக்க தனித்துவம் வாய்ந்த, அவருக்கே உரிய 'வாழும் பாணி' யின் உதவியுடன் வாசகர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கைகளில் தொடர்ந்து முன்னேறி வளம் பெறலாம்? - என உணர்த்தும் நூல் இது.இந்த 'ரஜினியின் மந்திரங்கள்" என்னும் நூலில், பல புத்தகங்களை ஏற்கனவே படைத்து, மிக்க உயர்ந்த அளவில் விற்பனையாக்கி வெற்றிகண்ட PC பாலசுப்ரமணியன் ரஜினிகாந்த ஆற்றிய குறிப்பிட்ட பற்பல உரைகள், மற்றும் பொது மக்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஆகியவையில் இயல்பாக வெளிப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் இடையீடுகள் முதலியவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கைப்பாடங்களைச் சிறப்புத் தொகுதியாக வெளியிட்டிரிக்கிறார்.தனது ரசிகர்களால் 'தலைவர்' என்று மிக்க அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த பல லட்சக்கணக்கான மக்களின் மனதுகளில் சிறந்த, ஊக்குவிப்பான எண்ணங்களை உருவாக்கும் திறமை உள்ளவர். அவருடைய பெரும் வெற்றியின் கதை ஒரு பஸ் கண்டக்டர் என்ற நிலையிலிருந்து இந்தியத் திரைப்பட உலகில் பெருவாரியான மக்களின் பேரன்புக்குப் பாத்திரமாகி 'சூப்பர் ஸ்டார்' நிலைக்கு உயர்ந்த வரலாறு, நிஜமாகவே அளவற்ற வியப்பைத் தருவதாகும்.அவரது சொந்த வாழ்வின் கதை ஒரு மனிதர் எப்படித் தனது தனிமனித இயல்புகளையும், பெருமதிப்புக்குரிய தனது வாழ்க்கியத் தத்துவகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல் தனது குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதை உணர்த்திக் காட்டிய உயர்தரமான ப்ளூப்ரிண்ட் ஆகும்!மேற்படியான அவரது உயர்ந்த வாழ்க்கை வரலாற்றிலிருந்து குறிப்பிடத்தக்க, பற்பல நிகழ்வுகளை இந்த நூலில் தொகுத்து, இந்த நூலின் ஆசிரியர் பாவசுப்ரமணியன் எப்படி ஒரு தனிமனிதர் எந்தச் சூழ்நிலையிலும் அதற்கேற்ப நல்ல முறையில் அமைத்துக்கொள்ளக் கூடிய மனோபாவம், அனுபவங்களிலிருந்து சரியான வாழும் முறைகளை அமைத்துக் கொள்ளும் விருப்பம், விடாமுயற்சி மற்றும் சரியான நடைமுறைத் தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டு தனிச்சிறப்புடன் புகழ்பட வாழமுடியும் என்று நன்கு சிந்தித்திருக்கிறார். அப்படி அவர் எல்லாக் காலங்களிலும் தனது வாழ்வில் இதுவரை தொடர்ந்து விளங்கியுள்ளார் என்பது அவரை ஒரு மிகவும் விரும்பத்தக்க மிக்க சீர்மைவாய்ந்த விக்கிரஹமாக ஆகியிருப்பது உண்மை.மேற்கூறிய 'ரஜினியின் மந்திரங்கள்'ல் ஒவ்வொன்றும் மிகமிக எளிமையானதும், யாரும் மேற்கொண்டு செயல் படுத்தக்கூடிய வாழும் முறையாகவும் அமைந்துள்ளது; அது ஒவ்வொன்றும் சமூகத்தின் மீதும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.