கங்கை எங்கும் போகிறாள்
கங்கை எங்கும் போகிறாள்: பயண அனுபவங்களின் அழகான தமிழ் கட்டுரை. லா.ச.ரா. சப்தரிஷியின் எழுத்தில் ஒரு தனித்துவமான பயணக் கதை!
| Category | Essay |
|---|---|
| Publisher | ஜெய்ரிகி பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Personal Essays , Tamil Literature , Travel |
Description
எவ்வளவு அருமையான வரி. முடிவதில்லை என்பதைவிட அலுப்பதே இல்லை எனக்கு. அதுவும் பஸ்ஸோ ரயிலோ ஓர சீட் கிடைக்கவில்லை என்றால் பயணிக்கவே மாட்டேன். வாகனச் சக்கரங்களின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு ஜன்னல் வழி ஒரு வினாடி காட்சி, இரவு நேரங்களில் பஸ்ஸில் ஊருக்குள் போகும் போது இரவுக் காட்சிகளை ரசிப்பேன். ரயிலில் கேட்கவே வேண்டாம். அது ஒரு தனி உலகம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத உலகம். டில்லிவரை போனோம் என்றால் ஆந்திரா, கர்நாடகா, ம.பி., உபி., அரியானாவில் கொஞ்சம், போபால் வழியெல்லாம் போகும்போது விதவிதமான மனிதர்கள், விதவிதமான உடைகள், விதவிதமான உணவுகள், விதவிதமான ருசிகள். சில இடங்களுக்குப் போன அனுபவம். சில இடங்களுக்கு போகாததும் அனுபவம். ஒரு பெரியவர் சொன்னார் "எல்லா இடங்களுக்கும் நீங்கள் நினைத்தால் போய்விட முடியாது. அந்த இடம் நீங்கள் வரவேண்டும் என்று நினைக்க வேண்டும்" என்றார்.-நூலிலிருந்து..
