அளவில்லாத மலர்
₹130₹123
இசை எழுதிய அந்தக் காலம் மலையேறிப் போனது - கவித்துவமான மலைக் காட்சிகள், தனித்துவமான கவிதை நடை, மற்றும் பிரபஞ்சன் பாராட்டும் கலைப் படைப்பு!
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . .
ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப் பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசையுடையது.
ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே. எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும்.
யாரைப் போலவும் அவர் எழுதவில்லை. இசை, இசையைப் போல எழுதுகிறார். அதனாலேயே, தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார்.
- பிரபஞ்சன்