Skip to content

தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை

₹100₹95
5% OFF

ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதிய தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை - கலைக்களஞ்சியத்தின் வரலாறு, தமிழர்களின் கனவு நனவான கதை, தகவல் களஞ்சியம்!

Category History
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 86
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

உலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டிப் பொருள் வாரியாகத் தலைச்சொற்களை அகரவரிசையில் அமைத்துப் பல தொகுதிகளாக வழங்குவதே 'கலைக்களஞ்சியம்' ஆகும். தமிழில் ஒரு கலைக்களஞ்சியம் என்பது தமிழரின் நூற்றாண்டுக் கனவாகும். அக்கனவை நனவாக்கியவர்கள் தி.சு. அவினாசிலிங்கம், பெ. தூரன் ஆகியோர். 20 ஆண்டு உழைப்பு, 1200 கட்டுரையாளர்கள், 13,000 தலைப்புகள், 7,500 பக்கங்கள், 10 தொகுதிகள் கொண்டு 1953 முதல் 1968 வரை வெளியான கலைக்களஞ்சியம் இந்தியப் பதிப்புலகில் ஒரு சாதனையாகும், ஏராளமான தகவல்களைத் திரட்டி, இச்சாதனை வரலாற்றை இச்சிறு நூலில் நயம்பட எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.