Skip to content

மாதொருபாகன், அர்த்தநாரி, ஆலவாயன்

3 நூல்களின் தொகுப்பு

₹260.00

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் தொகுப்பு! அர்த்தநாரி, ஆலவாயன் நாவல்களும் அடங்கும். இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2016
Format Paperback

Description

‘மாதொருபாகன்’ நாவலும் அதன் முடிவை இருவிதமாக வைத்துச் செய்த  கற்பனையின் விளைவாகிய  ‘அர்த்தநாரி,’  ‘ஆலவாயன்’ ஆகிய இந்த மூன்று நாவல்களையும் மிகுந்த ஆசையோடு எழுதினேன். எழுதிய காலத்து இன்பநிலை முடிந்து இவற்றால் பெருந்துயர் பீடித்தபோது இவற்றை இனிமேல் தனித்தனியாகக்கூட வெளியிடக்கூடாது என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இப்போதோ மூன்றையும் ஒரே நூலாக வெளியிடும் நிலை.எண்ணங்களைத் தீர்மானிப்பதில் அகநிலை மட்டுமல்ல, புறநிலைக்கும் பெரும் பங்கிருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை. அதை இன்று நிதர்சனமாக உணர்கிறேன். இவை அச்சாகியே தீர வேண்டும் என்பது என் அவா அல்ல. ஆனால் அச்சிடாமல் நிறுத்துவது பொதுநிலையில் அறமாகாது. ஆகவேதான் இப்போதைய திருத்தப் பதிப்பு.-பெருமாள்முருகன்