நகரத்திணை
₹200.00
நகரத்திணை: நவீன கவிதைகளை மரபார்ந்த இலக்கணத்தில் அணுகும் ஒரு புதிய கவிதை விமர்சன நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Poetry Analysis , Tamil Literature |
Description
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் தற்காலத்தில் நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை ‘நகரம்’ எனும் திணை அமைப்பிற்கு உட்படுத்தி அதற்கான உரிப்பொருளை வரையறுக்கும் முயற்சியாக இந்நூல் அமைகிறது.நவீன கவிதைகளை மரபார்ந்த இலக்கண நோக்கில் அணுகும் இந்த முயற்சி சமகாலக் கவிதைகள்மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.
