புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல்
நிலாந்தன் எழுதிய 'புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல்' புத்தகம், ஈழப் போருக்குப் பின் தமிழ் அரசியல் மாற்றங்களை அலசுகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Political Analysis , Sri Lankan Civil War , Tamil Politics |
Description
நிலாந்தன் 1989இல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகள் எழுதத் தொடங்கினார். இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம், வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வாரப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரல் கட்டுரைகள் பின்னர் பொங்குதமிழ், குளோபல் தமிழ், JDS (Journalist for Democracy of Srilanka) போன்ற பல இணையதளங்களிலும் பதிவேற்றப்படுகின்றன.போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மீளப்பெறமுடியாத ஒரு பின்னணியில், போருக்குப்பின் அதாவது ஈழத்தில் தோன்றிய இரண்டாவது வீரயுகமொன்றின் வீழ்ச்சிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள், கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இது.
