பறவைகளும் வேடந்தாங்களும்
₹220.00
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலையை அலசும் ராஜமார்த்தாண்டனின் நூல். நவீன கவிதையின் முன்னோடி குறித்து அறிய இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Poetry , Tamil Literature |
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந்தர ராமசாமி. அவரது சிறுகதைகள், நாவல்கள் போலவே கவிதைகளும் படிக்குந்தோறும் புதிய அனுபவங்களைக் கிளர்த்துபவை. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட வியப்புணர்வைத் தன்னுள் கொண்டிருக்கும் சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை புதுமையும் சூட்சுமமும் செறிவும் கூடியது. அதனை உள்வாங்கிக் கொள்ளும் எத்தனிப்பில் அவரது கவிதைகளினூடாக மேற்கொண்ட ஒரு வாசிப்பனுபவத்தின் எளிமையான வெளிப்பாடே இந்த நூல்.