Skip to content

தமிழரின் உருவ வழிபாடு

₹125.00

தமிழரின் உருவவழிபாட்டு மரபினை வரலாற்றின் கோணத்தில் விரிவாகப் பேசும் அரிய நூல்!

Category Essay
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2020
Format Paperback
Tags Cultural Studies , Religion , Tamil History

Description

கந்து எனும் மரத்தறியே ஆதியில் வழிபடப்பட்ட அரூபம். கடம்பமரக்கந்துவில் உறைந்த இறைவன் கந்தனும் கடம்பனுமானான். கந்துவழிபாடு காலப்போக்கில் மேற்கூரையுடனான அறையுடன் ‘கந்துடைப்பொதியில்’ எனப் பரிணாமம் காண, அதன் கடைசி எச்சத்தைக் கரிகால்சோழனின் காலத்தில் அறிவியலும். கந்துவின் அடுத்தப் பரிணாமமான கந்திற்பாவை; அரையரூபம் காட்டி பூதத்தாழ்வாரை உசுப்பேற்ற; “தொன்மத்தில் வெவ்வேறு வடிவம் காட்டுகிற உன்னை, அவற்றிற்கான சிற்ப வடிவங்களின் மூலம் காணப் பேராவல் மிகுத்துள்ளேன் - ஆவணசெய்” எனத் திருமாலிடம் முறையிடுகிறார். பொய்கையாழ்வாரோ “உலகளந்தமூர்த்தி உருவேமுதல்” எனத் தமிழகத்தில் முதன்முதலாக உருவத்திற்குள் நுழைந்த வடிவத்தினை ஆவணப்படுத்தியுள்ளார். இவ்வாறு ஏராளமான அரிய சிறப்புத்தரவுகளுடன் இந்நூல் தமிழரின் உருவவழிபாட்டு மரபினை விரிவாக வரலாற்றின் கோணத்தில் பேசுகிறது.