Skip to content

மணல் உயிர்

₹200.00

சீனு ராமாசாமியின் 'மணல் உயிர்' கவிதைத் தொகுப்பு! இயற்கையின் அழகையும், வாழ்வின் அர்த்தத்தையும் தேடும் கவிதைகள்.

Category Poetry
Publisher களம் புதிது
Language Tamil
Year 2026
Format Paperback

Description

இந்த இயற்கையின் சகலத்தின் மீதும் கவனமும் பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மையும் மிகுந்த கவித்துவ வெளியானது எப்பொழுதும் ஒரு அனாதையைப் போல திரியும் தன்மையையும் சேர்த்தேதான் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஞானியை போன்றதொரு அந்நியமும் மறுபக்கம் இருத்தலியில் சார்ந்த அழகியல் மற்றும் அந்தி மாலை வயல்வெளிகள் மற்றும் தீரா காதலின் மௌனங்கள் பொருள் தேட்டங்கள் போன்றவற்றை மறுபக்கம் பேசியபடியே தான் வாழ்வைக் கடக்கின்றன.இந்த வாழ்வு இனியும் இப்படித்தான் இருக்கும் என்பதற்காக அந்நியப்பட்ட மறைந்து போன காம்யூ வின் மேலைப் பார்வை கிடையாது நமது அன்றாடம், இந்த வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் சகித்து அதற்கு ஒரு பண்பு நிலைப்பாட்டை தந்து விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம் என்பதை அறிந்த கீழைய வாழ்வின் நம்பிக்கைகளோடுதான் மணல் உயிர் என்கிற இந்த கவிதை தொகுப்பின் மூலம் நம்மோடு உரையாடுகிறார் சீனு ராமசாமி.-கவிஞர் யவனிகா ஸ்ரீராம்