தமிழின் சம உரிமைக்கான போராட்டம்
அறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுகளுடன், தமிழ் சம உரிமைக்கான போராட்டத்தை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Justice , Tamil Language Rights |
Description
இது மொழிப் பிரச்சினை அல்ல - இது ஆதிக்கப்பிரச்சினையே தவிர மொழிப் பிரச்சினை அல்ல... நாம் எந்த அளவிற்குப் பணியத் தயாராக இருக்கிறோம் என்பதைக் கண்காணிப்பதற்காக -அளவிடுவதற்காக, அரசியல் ஆதிக்கக்காரர்கள், அரசியல் சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்திய வெறி கொண்டவர்கள், தங்களுடைய மொழியைத் திணித்து இதைத்தான் நீ ஆட்சி மொழியாகக் கொள்ளவேண்டும். இதிலேதான் பாடங்கள் நடக்கும். இதிலேதான் தேர்வுகள் நடக்கும். இதிலேதான் சட்டங்கள் இயற்றப்படும். இந்த மொழியில் தான் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். இது தெரிந்தால் இங்கெல்லாம் வா -இது தெரியாவிட்டால் நீலகிரித் தோதுவர்களைப் போல், குருவிக் காரர்களைப் போல், ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோக்களைப் போல், நீயும் உன்னுடைய நாட்டோடு, கூட்டோடு, இரண்டாந்தரக் குடிமகனாய். மட்டரகமான மனிதனாய், ஏனோ தானோவாய், எடுப்பார் கைப்பிள்ளையாய் அடங்கிக் கிட என்பதுதான் இதன் உட்பொருளாகும்.-- அறிஞர் அண்ணா
