கதாநாயகனின் மரணம்
தமிழ் சினிமா வரலாறு, சமகாலப் போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள்
தமிழ் சினிமா வரலாறு மற்றும் சமகால போக்குகள் குறித்த ராஜன் குறையின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | கயல் கவின் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Cultural Criticism , Film Studies , Tamil Cinema |
Description
தமிழ் சினிமா வரலாறு, சமகால போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சித்தாந்தம் மட்டுமின்றி, தத்துவக் கோட்பாடுகளும் இந்நூல் முழுக்க இழையோடுகின்றன. ‘திரைப்படம் ஒரு மொழியா?’ என்ற கேள்வியை முன்வைக்கும் ராஜன்குறை, நம்மை மேற்கத்திய விவாதங்கள் மூலம் வழிநடத்தி, திரைப்பட தொகுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சினிமா மொழியற்ற எழுத்து என வரையறுக்கிறார். வெகுஜன சினிமாவில் தார்மீக சாகசக் கதாநாயகன் முன்னிறுத்தப்படுவதும் அதன் உள்ளியக்கம் தனித்தியங்குவதும் அது முதலீட்டியத்தின் வடிவமாகப் பார்க்கப்படுவதும் ஆகிய போக்குகளை நாம் தீவிரமாக ஆராய வேண்டியதன் அவசியத்தையும் ராஜன்குறை சுட்டிக் காட்டுகிறார். இவரது வெகுஜன சினிமா மீதான மறுவாசிப்பு என்பது ரொமாண்டிஸிசம் சார்ந்தது அல்ல; அதற்கான தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டதாகும்.ராஜன்குறை, நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தமிழ் திரைப்படங்கள் குறித்த ஆய்வு செய்வுக்காக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, நியூடெல்லியில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.
