சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்
ந. ஜயபாஸ்கரன் எழுதிய 'சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்' கவிதையில் மதுரையின் அழகை அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | கயல் கவின் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
Description
மதுரையை ஆசையின் எல்லையற்ற எல்லையாகவும், திருவிளையாடற் புராணத்தை ஆசையின் எண்ணற்ற படலங்களாகவும் நவீன கவிதைகளில் கையாள்கிறார் ஜயபாஸ்கரன். அவ்வகையில் வருடம் முழுவதும் திருவிழாக்களை காலம்காலமாக பாவிக்கும் வாழ்தலின் ஆசையை வண்ண, வண்ண உணவுகளாக்கிப் பரத்தியிருக்கும் புராணிகம் மற்றும் வேறு காலத்தின் பெருமிதத்தில் திளைக்கும் நரிகள் இன்றும் அடிக்கடி பரிகளாக வேடமிடும் பல அடுக்குகளிலான மதுரையை, ஆசையின் நித்திய குறியீடாக அவர் மாற்றியுள்ளார். தன் அணிகலனான ‘ஆசை’யின் பாம்பால் மீண்டும் ஜயபாஸ்கரன், கவிதைகள் வாயிலாக ஆலவாயை அளக்க முயன்றிருக்கிறார். தமிழ்க் கவிதையெனும் அகன்ற சன்னதியில் மிக அழகிய, ‘சின்ன மோகினி’ உருவமாக ஜயபாஸ்கரன் இருப்பார்.- ஷங்கர்ராமசுப்ரமணியன்
