முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்
கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்
அம்பேத்கர் முஸ்லிம்களைப் பற்றி என்ன சொன்னார்? கட்டுக்கதைகளை மறுத்து உண்மையை அறிய ஒரு புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கீழைக்காற்று |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | History , Politics , Social Issues |
Description
அம்பேத்கர், முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார், முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றார், முஸ்லிம்கள் சீர்திருத்தத்துக்கு எதிரானவர் என்றார் என்று பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறார்கள். முஸ்லிம்களை அம்பேத்கர் எந்த இடத்திலும் பயங்கரவாதி என்று சொல்லவே இல்லை என்கிறார் ஆனந்த தெல்தும்ப்டே. பயங்கரம் என்ற சொற்கள் அவரது நூலில் எந்த இடத்தில் எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டுபிடித்து நுணுக்கமாக மறுக்கிறார். முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து அம்பேத்கர் எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறார்.அதே நேரத்தில் முஸ்லிம்கள் மீது அம்பேத்கர் வைத்த விமர்சனங்களையும் இந்தப் புத்தகம் விடுபடாமல் சொல்கிறது. முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் எழுதியதை முழுமையாக அறிய, 'இந்தியப் பிரிவினை’ என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். அம்பேத்கர் நூல் வரிசையில் அது 15-வது தொகுதியாக ஏற்கெனவே வெளிவந்துள்ளது. அதில் இருந்துதான் இந்த நூலுக்கான ஆதாரங்களை ஆனந்த் தெல்தும்ப்டே எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்.இந்தியாவை ஒரே தேசமாக இந்துத்துவ அரசியல்வாதிகள் ஆக்க முனைகிறார்கள். இது பலதேசங்களின், பன்முகத்தன்மை கொண்டவர்களின் கூட்டமைப்பு என்று சொன்னவர் அம்பேத்கர். அப்படிப்பட்ட அம்பேத்கரை எதிரியின் முகாமில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இந்தக் காலகட்டத்தின் அவசியத் தேவை.
