Skip to content

பழுப்பு நிறப் பக்கங்கள் (பகுதி 1)

₹240.00

சாரு நிவேதிதா எழுதிய 'பழுப்பு நிறப் பக்கங்கள்' நூலில் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் உள்ளது. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Literary Criticism , Literary History , Tamil Literature

Description

இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பற்றிய ஒர் அறிமுகம்.ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கின்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர் கூடத் தெரியவில்லை. உவேசா, கு. அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், திருவிக என்று தொடங்கி தமிழ் படைப்புலகின் போக்கைத் தீர்மானித்த சில முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.தினமணி இணையப் பதிப்பில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.