Skip to content

வீரபாண்டிய கட்டபொம்மன் (ப்ராடிஜி தமிழ்)

₹80.00

கட்டபொம்மன் கதையை விறுவிறுப்பாக சொல்லும் புத்தகம்! வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Category Biography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2008
Format Paperback
Tags History , Indian History , Tamil History

Description

பாஞ்சாலங்குறிச்சியில் நல்லாட்சி புரிந்த மன்னன் கட்டபொம்மன். இடையில் ஆற்காடு நவாப் செய்த துரோகத்தால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.ஆங்கிலேயர்கள் படை திரட்டி வந்தால், பாஞ்சாலங்குறிச்சியையே பஞ்சு பஞ்சாக ஊதிவிடலாம். இருந்தாலும் கட்டபொம்மன் அடிபணியவில்லை. மண்ணின் மைந்தர்களிடம் வரி கேட்க அந்நியனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலிர்த்தெழுந்தார். இறுதிவரை போராட முடிவெடுத்தார்.வாழ்க்கை போர்க்களமானது. வாளால் பேச வேண்டிய கணங்களே அதிகமாயிருந்தன. இறுதியில் அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல் என்று தண்டனையை ஏற்றுக்கொண்டார், நெஞ்சு நிமிர்த்தி.வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையை இதைவிட விறுவிறுப்பான நடையில் எங்கும் படித்திருக்கவே முடியாது.