Skip to content

விஸ்வரூபம்

மிகப் பெரிய கான்வாஸில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஆச்சரியம்

₹625.00

இரா. முருகன் எழுதிய விஸ்வரூபம் நாவல், தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல். பரவசமளிக்கும் வாசிப்பனுபவத்திற்கு இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2013
Format Paperback

Description

கவிதை, கட்டுரை, நாவல், திரைப்படம் என்று படைப்புலகின் அத்தனை சாத்தியங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டு வரும் இரா. முருகன் தற்போது எடுத்திருக்கும் விஸ்வரூபம், தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் முக்கிய மைல்கல். மேஜிகல் ரியலிசத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்று போதும். 19ம் நூற்றாண்டின் மையத்தில் சுழலும் இந்தப் பிரம்மாண்டமான நாவல், காலத்தில் முன்பும் பின்பும் இயல்பாக நகர்ந்து சில கண்ணிகளை முடிக்கவும் அவிழ்க்கவும் செய்கிறது. தனது வம்சாவளியிடம் இருந்து பெற்ற விஷயங்களே இந்தக் கதை என்கிறார் இரா. முருகன். ஆறுக்கும் மேற்பட்ட மொழி நடைகள். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். 3 நாடுகள், 8 ஊர்கள், 4 கலாசாரச் சூழல்கள் ஊடே 6 இழைகளாகக் கடந்து போகிறது இந்தக் கதை. நகைச்சுவை என்னும் மெல்லிய நூலிழை அனைத்துப் புள்ளிகளையும் சாதுரியமாக ஒன்றிணைக்கிறது. அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக விரியும் விஸ்வரூபம் பரவசமளிக்கும் ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. காசர்கோட்டு குடும்பத்தோடு சேர்ந்து ஒரு சுவாரஸ்யமான மாந்தரீக யதார்த்த உலகத்துக்குள் அடியெடுத்து வைக்க அன்புடன் அழைக்கிறோம்!