Skip to content

பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)

ஒட்டுமொத்த இந்தியாவையும் பீதியில் உறைய வைத்த வழக்குகள், விசாரணை விவரங்கள்

₹255₹242
5% OFF

எஸ். பி. சொக்கலிங்கம் எழுதிய பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1) - தமிழகத்தின் பரபரப்பான கொலை வழக்குகள், துப்பறியும் விவரங்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் இதில் உள்ளன.

Category Report
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2023
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட பாவ்லா கொலை வழக்கின் பின்னணி என்ன? தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டனர்? ஒருகாலத்தில் திரையுலகின் முடிசூடா மன்னராக மின்னிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறியது எப்படி? ஆளவந்தார் கொலை வழக்கை இன்றளவும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது ஏன்? பல புதிய சிக்கல்களைக் கொண்டிருந்த நானாவதி கொலை வழக்கு எவ்வாறு தீர்க்கப்பட்டது? சிங்கம்பட்டி கொலை வழக்கு, வெம்பன் வழக்கு, மரியாகுட்டி கொலை வழக்கு என்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட, திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட சில பிரபலமான கொலை வழக்குகளின் முழுமையான பின்னணி இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

கொலை, கொலைக்கான காரணம், கொலையாளியின் பின்னணி, துப்புத் துலக்கப்பட்ட விதம், விசாரிக்கப்பட்ட முறை, குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட விதம் என்று படிப்படியாக விவரித்து இறுதியாக எத்தகைய தீர்ப்புகளை இந்த வழக்குகள் பெற்றன என்பதை விறுவிறுப்பான முறையில் விவரித்துள்ளார் வழக்கறிஞர் குக. சொக்கலிங்கம். கற்பனை கிரைம் கதைகள் எல்லாம் பக்கத்தில்கூட வரமுடியாது.