வனநாயகன்: மலேசிய நாட்கள்
ஆரூர் பாஸ்கர் எழுதிய வனநாயகன்: மலேசிய நாட்கள் - மலேசியாவில் ஒருவரின் சவாலான வாழ்க்கை, துரோகம், மற்றும் அதை எதிர்கொள்ளும் துணிச்சலைப் பற்றிய நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 304 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
சாஃப்ட்வேர் வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, கைநிறைய சம்பளம், திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்... இப்படி ஆசைப்பட்டுதான் நானும் மலேசியாவுக்கு வந்தேன். அந்தக் கனவு நிஜமாகிவிட்டதாகவே நினைத்தேன். ஆனால், என்னையும் அறியாமல் என்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்பட்டது. அதை இழுத்து மேலே போட்டுக்கொண்டவனே நான்தான் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. பணத்தில் புரள்கிற சிலருக்கு, நான் இடைஞ்சலாகிவிட்டேன், என்னை ஊருக்கு அனுப்பிவைக்கப் பார்த்தார்கள், நான் அதற்குச் சம்மதிக்காதபோது, இந்த உலகைவிட்டே அனுப்பவும் துணிந்துவிட்டார்கள். இதற்கு என்னைச் சுற்றியிருந்த சிலரே உடந்தை என்று தெரியவந்தபோது, நான் உடைந்துபோனேன். இனி யாரை நம்புவது? என்ன செய்வது? இத்தனை அநியாயம் செய்தவர்களைச் சும்மா விடுவதா? வெளிநாட்டுமண்ணில் தன்னந்தனியனாக என்னால் என்ன செய்யமுடியும்? ஏதாவது செய்யத்தான் வேண்டும், துணிந்துவிட்டேன், தொடங்கிவிட்டேன்...
