மாட்டிறைச்சி அரசியல்
₹100₹95
5% OFF
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய மாட்டிறைச்சி அரசியல் - வேதகாலத்தில் மாட்டிறைச்சி உண்பது குறித்த உண்மைகள், சான்றுகள் மற்றும் அரசியல் பின்னணியை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ரிக்வேதகால ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக் கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதையும் ரிக்வேதத்திலிருந்தே தெள்ளத் தெளிவாகக் காண்கிறோம். ரிக் வேதத்தில் (X.86.14) இந்திரன் கூறுகிறான்: “அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்தார்கள்.’ அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளும், காளை மாடுகளும், கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் (X 91.14) கூறுகிறது. வாள் கொண்டோ அல்லது கோடரி கொண்டோ பசு கொல்லப்பட்டதாக ரிக் வேதத்திலிருந்து (X.72.6) தெரிகிறது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
