Skip to content

வேரில் பழுத்த பலா (மீ வெளியீடு)

சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்

₹140₹133
5% OFF

சு.சமுத்திரம் எழுதிய வேரில் பழுத்த பலா - அலுவலக வாழ்க்கை, சமூகப் போராட்டங்கள் மற்றும் ஏழைப் பெண்களின் துயரங்களை சித்தரிக்கும் ஒரு நாவல். சமூக நேயம் நிறைந்த படைப்பு.

Category Novel
Publisher மீ வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society
SKU 9789349539228

Description

ஒரு படைப்பில் ஒருத்தியைக் கொண்டு வந்து, அவள் கற்பு எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று ஒரு சஸ்பென்சை ஏற்படுத்தி, அந்த சஸ்பென்சின் இடையே. ஒரு பிரச்சினையைச் சொல்லிக் கொண்டே போவது எனது வேலைஅல்ல. இதனால் எந்த மக்களைப் பற்றிச் சித்தரிக்கிறோமோ. அவர்கள் பக்கம் கவனம் போகாது. ஆகையால் தான் எனது படைப்புக்கள் எதிலும், செக்ஸ் உப்பை கரைப்பதில்லை. இந்த ஒரு தனித்துவமும், இந்த சமூகத்தை மனதார நேசிக்கும் நேயமும், என் படைப்புகளுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.

அலுவலகங்களில் அவமானப்பட்டு, ஆயாசப்பட்டு, திறமையை முளையிலேயே கிள்ளி எறிய விட்டு விட்டு, தவிக்கும் அன்னம் போன்ற படித்த ஏழைப் பெண்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல் இது. அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும். முற்படுத்தப்பட்டோருக்கும் இடையே இலை மறைவு காய் மறைவாக நடக்கும் போராட்டத்தைச் சித்தரிக்கும் படைப்பு இது.

-சு.சமுத்திரம்