மாநில சுயாட்சி (மின்னங்காடி)
கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்ட 'மாநில சுயாட்சி' புத்தகம், இந்திய அரசியலில் மாநில சுயாட்சி பற்றி விவரிக்கிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | மின்னங்காடி |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Constitutional Law , Federalism , Indian Politics |
Description
மைய - மாநிலங்களின் உறவு குறித்துத் தெளிவான கருத்துகளை அறிந்து கொள்வதற்காக முன்னாள் தலைமை நீதிபதி திரு. ராஜமன்னார் அவர்களைத் தலைவராகவும், முன்னாள் தலைமை நீதிபதி திரு. சந்திரா ரெட்டி, டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழுவினைத் தமிழ்நாடு அரசு 22-9-1969ல் நியமித்தது. அந்தக் குழு ஓராண்டுக் காலத்துக்கு மேல் ஆய்வுகளை மேற்கொண்டு 10-3-1971 அன்று தனது அறிக்கையை அளித்தது. (அந்த அறிக்கையைத் தமிழக அரசு ஏற்கெனவே நூலாக வெளியிட்டுள்ளது).அந்த அறிக்கையை மைய அரசின் பார்வைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் கலைஞர் அவர்கள் 15-6-1971ல் அனுப்பினார்கள், அதைப் பெற்றுக்கொண்டு, இந்தியத் தலைமை அமைச்சர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் அவர்கள், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு, 22-6-1971ல் எழுதிய கடிதத்தில் "இது குறித்துத் தமிழ் நாடு அரசின் கருத்தினை எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று தெரிவித்திருந்தார்கள்.
